திருப்பூர், ஜூன் 20: பனியன் பேக்டரி லேபர் யூனியன் (ஏஐடியூசி) சங்க பொதுக்குழு கூட்டம் திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்துணைத் தலைவர் ரவி தலைமை வகித்தார். ஏஐடியூசி சங்க மாவட்ட கவுன்சில் தலைவர் மோகன் தற்போதுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும், மாவட்ட குழு முடிவுகள் மற்றும் சங்க செயல்பாடுகள் குறித்தும் பேசினார். கூட்டத்தின் நோக்கம் குறித்து சங்க பொதுச்செயலாளர் சேகர், பொருளாளர் செல்வராஜ், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பேசினார்கள்.