திருப்பூர், ஜூன் 22: திருப்பூர் போயம்பாளையம் அவிநாசி நகரை சேர்ந்தவர் திவாகர் (29). இவர் பனியன் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 20ந் தேதி அவிநாசி நகர் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் தன்னை வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் எனஅறிமுகப்படுத்தி கொண்டார்.
தொடர்ந்து குடிபோதையில் இருந்த திவாகரிடம் ரூ.500 கேட்டுள்ளார். திவாகர் ரூ.250 மட்டுமே உள்ளது என கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த நபர் அவரின் வாக்காளர் அட்டையை பிடுங்கிசென்றார். இது குறித்து திவாகர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் போலீஸ் போல் நடித்து பணம் பறித்த சுரேஷ் (எ) கார்த்திக் (34) என்பவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.