பந்தலூர், மார்ச் 20: பந்தலூர் சுற்று வட்டாரம் பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடுகள் அதிகரித்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதிகளில் கொளப்பள்ளி, சேரங்கோடு, படச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவை மோசமாக உள்ளது.
இதனால் வாடிக்கையாளர்களான பள்ளி, கல்லூரி மாணவர்கள், வங்கி சேவை, ரேசன் கடை உள்ளிட்ட அதன் சேவையை பயன்படுத்துபவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேவை வழங்க முன் கூட்டியே பணத்தை பெற்று கொண்டு முறையாக சேவை வழங்காமல் இருப்பது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயலாகும் எனவே முறையான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.