திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே நெட்டூர் பகுதியை சேர்ந்தவர் நவாஸ். அவரது மகள் அஸ்னா (22). பெரும்பாவூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎட் படித்து வந்தார். மகன் ஆதில் (18). பிளஸ் 2 படித்து வந்தார். அருகில் உள்ள கோண்திருத்தி பகுதியை சேர்ந்தவர் எபின்பால் (20). அவரது நண்பர் பிரவின் (20). ஆதலின் நண்பர் ஒருவருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அஸ்னா தன்னுடைய வீட்டில் கேக் தயாரித்தார். அந்த கேக்கை கொடுப்பதற்காக அஸ்னா, ஆதில், எபின்பால், பிரவின் ஆகிய 4 பேரும் ஏரி வழியாக ஒரு படகில் நண்பரின் வீட்டுக்கு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தண்ணீரில் தத்தளித்த பிரவினை காப்பாற்றி கரை சேர்த்தனர். ஆனால் அஸ்னா, ஆதில், எபின்பால் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். …