மேட்டூர், ஏப்.6:மேச்சேரி அருகே பாணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஸ்வரன்(29). இந்த ஊராட்சியில், சாலையோரத்தில் குதிரைக்காரன்புதூரை சேர்ந்த குருநாதன் மகன் சேட்டு என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் புகார் செய்ததால், ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும், ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, காவல்துறைக்கும். கலெக்டருக்கும் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன், வெங்கடேஸ்வரன் டூவீலரில் சென்ற போது, சேட்டு உள்ளிட்ட இருவர் அவரை வழிமறித்து, மது விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தாயா?, உன்னை கொல்லாமல் விடமாட்டோம் எனக்கூறி மது பாட்டிலாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த வெங்கடேஸ்வரன், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மேச்சேரி போலீசார் சேட்டு உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பஞ்.தலைவரை தாக்கிய
2 பேர் மீது வழக்கு
previous post