கம்பம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில், கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். கடந்த சில நாட்களாக சுருளி அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து தரும், அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை நீரோடைகளில் அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சுருளி அருவியில் நேற்று அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அருவியில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை இருப்பதால், வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.இதுகுறித்து வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட சுருளி அருவி, கடந்த 2021 மார்ச் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. அதே நேரத்தில் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் நுழைவு கட்டணம் ரூ.30 மட்டும் செலுத்தி, வனப்பகுதிக்குள் மட்டும் நடந்து சென்று, இயற்கை வளத்தையும், அருவியையும் பார்த்து வந்தனர். இந்நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக கடந்த ஏப். 19ம் தேதி முதல் சுருளி அருவி மீண்டும் மூடப்பட்டது’’, என்றார்….