பெரியகுளம் :பெரியகுளம் அருகே, கோடைமழையால் நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் 126.28 அடி உயர சோத்துப்பாறை அணை உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கோடைமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் அணையின் நீர்மட்டம் 75.11 அடியிலிருந்து கடந்த 4 நாட்களாக 17 அடி உயர்ந்த நிலையில், நேற்று இரவு ஒரே நாளில் 8 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 100.11 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 104 கன அடியாக உள்ள நிலையில் குடிநீருக்காக 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்பொழுது, அணையில் நீர் இருப்பு 61.62 மில்லியன் கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்து உயர்ந்து வருவதால், சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் வீரபாண்டியில் 6.4 சென்டிமீட்டர் மழை அளவும், பெரியகுளத்தில் 4.4 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது….
நீர்ப்பிடிப்பில் தொடர்மழை சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு
previous post