நீடாமங்கலம்: டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் தமிழக முதல்வரால் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி குறுவை சாகு படி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதியில் விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கி தற்போது முன் கூட்டியே நிலத்தடி நீரில் சாகுபடி செய்துள்ள குறுவை அறுவடை முடிந்து தாளடி விவசாயப்பணியும், சம்பா சாகுபடி பணியையும் விவசாயிகள் தொடங்கி தற்போது சம்பா சாகுபடிக்கு உழவு செய்து விதை விடும் பணியில் விவசாயிகள் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பகுதியில் உள்ள வயல் பகுதியில் நேற்று மினி இயந்திரம் மூலம் நடவு பணி நடை பெற்றது….