சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரத்தை சேர்ந்த திருவேங்கடம் மனைவி புவனேஸ்வரி, தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வேயர் தேவி (30) என்பவரை அணுகியுள்ளார். அவரை பலமுறை அலைக்கழித்த தேவி, ரூ.3,500 கொடுத்தால் சர்வே செய்வேன் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத புவனேஸ்வரி இதுபற்றி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை நேற்று சர்வேயர் தேவியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்தனர்….