வாழப்பாடி, மே 11: வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சியில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தலைமையில், நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, நில உரிமையாளர் ரகுராமன் (45) என்பவர், அவரது டூவீலருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த் மற்றும் வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
நிலத்தை அளக்க எதிர்ப்பு டூவீலருக்கு தீ வைப்பு
previous post