நிலக்கோட்டை, மே 1: நிலக்கோட்டையை அருகேயுள்ள எத்திலோடு, விளாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பூ, நெல், வாழை, கரும்பு ஆகிய பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறையின் உழவன் செயலியை கிராமப்புற விவசாயிகள் பயன்படுத்தும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்த மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் செயல் விளக்கம் அளித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். இதன்மூலம் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஸ்மார்ட் போன் மூலம் உழவன் செயலி பயன்பாட்டினை கற்று கொண்டனர்.