காரைக்குடி, ஆக.8: காரைக்குடியில் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் குமரேசன், நகர அவைத்தலைவர் சன்சுப்பையா, நகர துணைச் செயலாளர்கள் கண்ணன், லட்சுமி, மாவட்ட பிரதிநிதிகள் சொக்கலிங்கம், ஜான்கென்னடி, சேவியர், நிர்வாகிகள் பழனி, பிரசன்னா, பொதுக்குழு உறுப்பினர் ஆதிகண்ணத்தாள், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதாசெந்தில், வட்ட செயலாளர்கள் பொறியாளர் சேதுராமன், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சூரக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, ஊராட்சி செயலாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் கோட்டையூர் சுப்பிரமணியன், சூரக்குடி சொர்ணம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டையூர், அழகாபுரி, பள்ளத்தூர், கானாடுகாத்தான், கொத்தமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சின்னத்துரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இலுப்பைக்குடி ஊராட்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் முத்துராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்துஅன்பரசு, துணைத்தலைவர் திருநெல்லை ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.