மயிலாடுதுறை, ஜூலை11:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (25). இவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு பேருந்துக்காக காத்திருந்தபோது ஜெயப்பிரகாஷ் சிறுமியிடம் அத்து மீறி நடந்திருக்கிறார். இது குறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என ஜெயபிரகாஷ் மிரட்டியிருக்கிறார். இது குறித்து சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாகவல்லி மற்றும் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெயபிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.