சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவித சதி திட்டமும் தீட்டவில்லை என ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் 9வது சம்மனுக்காக 2வது நாளாக இன்று ஆஜரானார். அப்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஓ பன்னீர் செல்வத்திடம் குறுக்கு விசாரணை செய்தார். விசாரணையின் போது, ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை கேட்டதும் அரசாணை பிறப்பித்ததும் நீங்கள் தானே என ராஜா செந்தூர்பாண்டியன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், ‘ ‘ஜெயலலிதா மரணத்தில் தனிபட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான் ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன். தனிபட்ட முறையில் சசிகலா மீது மரியாதையும் அபிமானமும் இப்போது வரை உள்ளது.சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டுகளை களைய வேண்டும் என்பதற்காகவே ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன்,’ என்றார். மேலும் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ எந்தவித சதித் திட்டமும் தீட்டவில்லை.சசிகலா சதி செய்ததாக தகவல் எதையும் போலீஸ் திரட்டவில்லை என்ற ஐ.பி.எஸ், ஐஏஎஸ் அதிகாரிகளின் வாக்குமூலம் சரியே. 2011-12ம் ஆண்டிலோ, அதற்கு பின்னரோ சசிகலா சதி திட்டம் எதுவும் தீட்டவில்லை என்று ஐபிஎஸ் அதிகாரிகள் கூறியது சரியே.கோர்ட் தீர்ப்பளித்தபோது, ஜெயலலிதா தன்னை அழைத்து எம்எல்ஏக்களை கூட்டி முதல்வரை தேர்ந்தெடுக்க கூறினார். முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஆளுனரை சந்தித்து கடிதம் அளிக்கவும் ஜெயலலிதா கூறினார். பன்னீர் செல்வம் தான் முதல்வர் என பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனிடம் ஜெயலலிதா கூறினார். குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, என்னை முதல்வராக தேர்வு செய்தார் ஜெயலலிதா. பன்னீர் செல்வம் தான் முதல்வர் எனவும் அவரை எம்எல்ஏக்கள் தேர்வு செய்ய வேண்டும் எனவும் ஜெயலலிதா கூறினார்.தீர்ப்பு வந்த போது அழுது கொண்டு இருந்தேன். அழாதே பன்னீர், நீ தைரியமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறினார்.சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய் என்றும் ஜெயலலிதா கூறினார்,’ என்றார். …
நான் அழுத போது, அழாதே பன்னீர், தைரியமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா என்னிடம் கூறினார் : ஓ பன்னீர் செல்வம்
previous post