சிவகாசி மார்ச் 16: சிவகாசி ஒன்றியங்களில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சிவகாசியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சிவகாசி மாநகரம் பகுதி கழக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம், திருத்தங்கல் தனியார் மஹால், சித்துராஜபுரம், பள்ளபட்டி முத்துராமலிங்கம் காலனி ஆகிய 3 இடங்களில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, லட்சுமிநாராயணன், சித்துராஜபுரம் பாலாஜி, ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
அதிமுக நிர்வாகிகளுக்கு வேஷ்டி, சட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் முத்துபாண்டியன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் மாரீஸ்குமார், மாநகர பகுதி கழகச் செயலாளர்கள் சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன்,
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்கள் தொகுதி கணேசன், செல்வகுமரன், கார்த்திக், மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் தனுஷ் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.