சிவகங்கை, ஜூலை 5: சிவகங்கை அருகே மதகுபட்டி ஊராட்சி உச்சபுளிப்பட்டி கிராமத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட நாடக மேடை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் நாடக மேடையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அதிமுக சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், மாவட்ட கவுன்சிலர் தேவராஜ், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் செந்தில்முருகன், மதகுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் சங்கர் ராமநாதன், மாவட்ட விவசாய பிரிவு துணைச்செயலாளர் சீனிவாசன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.