நாசரேத், மே 8: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை வகித்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். கல்லூரி செயலர் பிரேம்குமார் ராஜாசிங் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜவகர் சாமுவேல் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் ராஜாசிங் ரோக்லண்ட் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். ஆண்களுக்கான தனிநபர் சாம்பியன் பிரிவில் ரோசையா பெஞ்சமின் என்ற மாணவரும், பெண்களுக்கான தனிநபர் சாம்பியன் பிரிவில் அபிஷா மற்றும் அபிஷா ஹெலன் ஆகியோர் பெற்றனர். வணிகவியல் துறை மாணவர்களும், கணிதத்துறை மாணவிகளும் ஒட்டு மொத்த சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல்கலைக்கழக அளவில் இடம்பிடித்த மாணவ, மாணவியருக்கு ரொக்கப்பரிசு காசோலையாக வழங்கப்பட்டது. இதில் கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் ராஜாசிங் ஹாரிஸ்டன், கிருபாகரன், ஜாண்சன், திலகர், எபி, மர்காஷிஸ், கல்லூரி நிதியாளர் சுரேஷ் ஆபிரகாம் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் விளையாட்டு விழா
previous post