நெல்லை, டிச. 13: நாங்குநேரியில் அடிதடி வழக்கில் கோர்ட்டில் கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரை கடந்த 2010ம் ஆண்டு அடிதடி வழக்கில் நாங்குநேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நாங்குநேரி ேகார்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்தா இவர் கடந்த இரண்டு மாதங்களாக நாங்குநேரி கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனையடுத்து நாங்குநேரி கோர்ட் முருகேசனை கைது செய்து ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிந்து முருகேசனை கைது செய்தனர். பின்னர் போலீசார், முருகேசனை நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.