நாகப்பட்டினம்,ஆக.29: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூலில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 233 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பில் 2020ம் ஆண்டில் கொடிநாள் நிதிவசூலில் சிறப்பாக வசூல் புரிந்தமைக்காக நாகப்பட்டினம் மாவட்ட பதிவாளர் ஜனார்த்தனனுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளிப்பதக்கத்தினை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவபிரியா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கார்த்திகேயன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.