நாகப்பட்டினம்,பிப்.4: நாகப்பட்டினம் நகர திமுக சார்பில் நடந்த அமைதி பேரணிக்கு தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர், திமுக மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அமைதி பேரணி பப்ளிக்ஆபீஸ் சாலை, புதிய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவக்கல்லூரி சாலை வழியாக பாரதி மார்கெட் அருகே உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்.
நகர துணை செயலாளர் சிவா, மாவட்ட பொருளாளர் லோகநாதன், கவுன்சிலர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் ஒன்றிய திமுக சார்பில் புத்தூர் வேளாங்கண்ணி பிரிவு சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு புத்தூர் ரவுண்டானாவில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்.