திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், நரி தலையை வைத்து வித்தை காட்டிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நரி தலை மற்றும் தோல் ஆகியவற்றை வைத்து வித்தை காட்டுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை வனச்சரகர் சரவணன் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா,எறையூர் கிராமத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன்(39) என்பவரிடம் இருந்து நரி தலையுடன் கூடிய தோல், நரி வால் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அலெக்ஸ் பாண்டியனை கைது