காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும், சனி, ராகு, கேது பகவான்களுக்கும், நடுநாயகனாக அமர்ந்து அருள்பாளிக்கும் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் மஹா சங்கட ஹர சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, நட்சத்திர விருட்ச விநாயகருக்கு பலவித நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. பின்னர், 1008 சகஸ்கர நாமாவளி அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்து இருந்தனர்….