தவளக்குப்பம், செப். 24: புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர்கள் கார்வண்ணன் (31), கபிலன். இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அங்குள்ள கண்ணா மீன்பிடி படகிற்கு 13 பேர் கொண்ட பங்குதாரர்களில் இவர்கள் இருவரும் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அதிகாலை கடலில் 10 நாட்டிகல் மைல் தூரத்தில் படகை நிலைநிறுத்தி நங்கூரமிட்டு மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அனைவரும் மீன் பிடிப்பதற்காக வேலை செய்யும்போது, பார்ட்னரான கார்வண்ணன் வேலை செய்யவில்லை என்று கபிலன் கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மோதலாக மாறியது. கார்வண்ணனின் முகத்தில் கபிலன் தாக்கியதில் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இது குறித்து கார்வண்ணன், தவளக்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.