Tuesday, June 11, 2024
Home » நடுக்கடலில் தொடரும் அட்டூழியம் : இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் விசைப் படகு கடலில் மூழ்கியது; 7 தமிழக மீனவர்கள் கடலில் தத்தளிப்பு!!

நடுக்கடலில் தொடரும் அட்டூழியம் : இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் விசைப் படகு கடலில் மூழ்கியது; 7 தமிழக மீனவர்கள் கடலில் தத்தளிப்பு!!

by kannappan

கச்சத்தீவு : தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மீண்டும் அத்துமீறி இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் விசைப் படகு ஒன்று கடலில் மூழ்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் அவர்களது வலைகள், படகுகளை சேதப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 550க்கும் மேற்பட்ட படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களின் ரோந்து கப்பலை கொண்டு மோதியதில், விசைப்படகு ஒன்று நீரில் மூழ்கியது. அந்த படகில் இருந்த 7 மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில், சக மீனவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்….

You may also like

Leave a Comment

4 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi