ராஜபாளையம்: ராஜபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமரன். கடந்த 2004ல் எல்லை பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்ந்த செந்தில்குமரன், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 52வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று ஒடிசாவில் உள்ள 142வது பட்டாலியனுக்கு தேர்வு செய்யப்பட்டார். நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றுவதற்காக, பெங்களூரு அருகே உள்ள கராலி பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்து வந்தார். நேற்று முன்தினம் காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, செந்தில்குமரன் தவறி விழுந்து சேற்றில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் ராஜபாளையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க, செந்தில்குமரனின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தியபின் உடல் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவியும்2 குழந்தைகளும் உள்ளனர். …