பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி வார மாட்டு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சுற்று வட்டார விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து, மாடுகளை வாங்கி செல்கின்றனர். அதிலும், அதிகப்படியாக கேரள மாநிலம் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிகம் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, தமிழகத்தின் சில மாவட்டங்களிலிருந்து சந்தைக்கு ஓரளவு மாடுகள் வரத்து இருந்தது. நேற்று நடந்த சந்தை நாளில், வெளி மாநிலங்களிலிருந்து மாடுகள் வரத்து சற்று குறைவாக இருந்தாலும், கோவை மற்றும் திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது.சுமார் 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இருப்பினும், கேரளா வியாபாரிகள் வருகை குறைவால், உள்ளூர் வியாபாரிகள் நாட்டு மாடுகளை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர். நாட்டு மாடுகள் வரத்து ஓரளவு இருந்தாலும், கேரள வியாபாரிகள் வருகை குறைந்து விற்பனை மந்தமானதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தில், ரூ.1.85 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது. ஆனால், நேற்று வர்த்தகம் ரூ.1.50கோடியாக குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்….
நகராட்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தம்
previous post