ஆரல்வாய்மொழி அக் 25:தோவாளை வட்ட அனைத்துப் பள்ளி விளையாட்டு போட்டி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கல்வி மாவட்ட அளவிலான தோவாளை வட்ட அனைத்து அரசு பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இங்கு நடைபெற்ற தடகளப் போட்டிக்கான நிகழ்ச்சியில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் முருகன் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினர். ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தடகள குறுவட்ட கொடியை ஏற்றி வைத்து முன்னிலை வகித்தார். பின்னர் குமரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் நாராயணன் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து தடகள போட்டியை தொடங்கி வைத்தார். இப் போட்டியில் தோவாளை வட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.