புதுக்கடை, நவ. 1: புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). அதே பகுதியை சேர்ந்தவர் ஜித் (33). இவர் ஒடிசாவில் எல்லை பாதுகாப்பு படையில் பணி புரிகிறார். இவர்களுக்குள் ஏற்கனவே பிரச்னை ஏற்பட்டதில் ஜித் மீது புதுக்கடை போலீசில் வழக்கு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் ஜித் நேற்று முன்தினம் சதீஷ்குமார் வீட்டின் முன்பு சென்று தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த உறவினர் ஐயப்பன் என்ற கூலித் தொழிலாளியையும் கத்தியால் வெட்டியுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் ஜித் மீது வழக்கு பதிவு செய்தனர். இது போன்று ஜித் அளித்துள்ள புகாரில், சம்பவத்தன்று ஐயப்பன், சதீஷ்குமார் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் கூறியுள்ளார். இதன்பேரிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.