சேலம், நவ.9: சேலம் அருகேயுள்ள மேச்சேரி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வக்கீல் (46). கூலித்தொழிலாளியான இவர் சேலம் சத்திரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த 40வயது மதிக்கதக்க ஒருவர் திடீரென வக்கீலை வழிமறித்தார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 3,250 ரூபாயை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். இதுபற்றி வக்கீல் அளித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
previous post