திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் காவேரி நகரில் ரூ.16.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து வரும் 15ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார் என்றார்….