தேவகோட்டை: தேவகோட்டை வெள்ளையன்ஊரணி மேல்கரை வடக்கில் கோதண்டராமர் சாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோயிலின் தேரோட்டம் நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. சுவாமி அம்பாள் உற்சவர்கள் தேரினுள் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். கோவிந்தா கோவிந்தா கோதண்டராமா கோவிந்தா என்ற கோஷங்கள் முழங்க விண்ணதிர அதிர்வேட்டுகளுடன் தேர் புறப்பட்டது. கோயிலைச்சுற்றி உள்ள ரதவீதிகளில் தேர் சுற்றியது. வழிநெடுகிலும் பக்தர்கள் கோதண்டராமரை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
தேவகோட்டையில் கோதண்டராமர் சாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்
previous post