Saturday, May 25, 2024
Home » தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 2 பள்ளி ஆசிரியர்கள் கைது: சிறையில் அடைப்பு

தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 2 பள்ளி ஆசிரியர்கள் கைது: சிறையில் அடைப்பு

by kannappan

திருச்சி: திருச்சி ராம்ஜிநகர் அடுத்த இனாம்குளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான முதல் நிலை தேர்வு நடந்து வருகிறது. நேற்று தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆங்கில ஆசிரியர் முருகேசன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோர் மற்றும் தோழிகளிடம் கூறியதை அடுத்து அவர்கள் பள்ளியை நேற்று மாலை முற்றுகையிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதால் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர் முருகேசனை ஒரு அறையில் வைத்து பூட்டினர்.தகவலறிந்த எஸ்பி சுஜித் குமார், ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், இனாம்குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நடந்த சம்பவம் உண்மை என தெரிய வந்ததை அடுத்து முருகேசனை ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து முருகேசனை கைது செய்தனர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் தாசில்தார் மற்றும் மாவட்ட பள்ளி கல்வித் துறை அலுவலர் விசாரணை நடத்தி ஆசிரியர் முருகேசனை சஸ்பெண்ட் செய்தனர்.இதேபோல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா கீழக்குறிச்சி 28 நெம்மேலியை சேர்ந்தவர் ராஜ்குமார்(53). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது அந்த பள்ளியில் பிளஸ் 2 வகுப்புக்கான திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தேர்வு எழுதிக்கொண்டு இருந்தார். அப்போது தேர்வு மையத்தில் பணியில் இருந்த ஆசிரியர் ராஜ்குமார், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி கண்டித்தும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வரம்பு மீறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சல் மற்றும் வேதனை அடைந்த அந்த மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மதுக்கூர் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரை மதுக்கூர் போலீசார், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர்(பொ) ஜெயா மதுக்கூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்ததன் அடிப்படையில் ஆசிரியர் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பட்டுக்கோட்டை போக்சோ கோர்ட்டில் ஆஜர் செய்தார். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரியர் ராஜ்குமாரை போலீசார் தஞ்சை சிறையில் அடைத்தனர். …

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi