விருதுநகர், மார்ச் 24: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் தகவல்: பாராளுமன்ற தேர்தல் 2024யை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்ச்.31 காலை 7 மணியளவில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல் சூலக்கரை மேடு வரை மாரத்தான் போட்டி நடத்தப்படும். மாரத்தான் போட்டி தூரம் ஆண்கள் 10 கி.மீ, பெண்கள் 8 கி.மீ தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாரத்தான் போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார், தன்னாட்சி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.7,500, 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.