தேனி, நவ. 18: தேனி நகர் புதிய பஸ்நிலையத்தில் உள்ள கடைக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனி நகர் பழைய ஜிஎச் ரோட்டில் குடியிருப்பவர் நாகராஜ் மனைவி சரோஜா (40). இவர் தேனி நகர் புதிய பஸ்நிலையத்தில் உள்ள திருப்பூர் பஸ் நிற்கும் பகுதியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் குடியிருப்பவர் ஜீவா(50).
இவர் அடிக்கடி தேனி புதிய பஸ் நிலையத்தில் சரோஜா நடத்தி வரும் கடைக்கு வந்து சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஜீவாவின் மனைவி விக்டோரியா, அவரது சகோதரர்கள் ஜஸ்டின், சர்ச்சில், ஜஸ்டின் மனைவி ஏஞ்சல், உறவினர் ராஜம் மற்றும் ஒருவர் என மொத்தம் 6 பேர் திடீரென சரோஜா கடைக்கு சென்று, அவரை அடித்து, கடைக்கு வெளியே இழுத்து போட்டு தாக்கினர். இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின்பேரில், தேனி போலீசார் விக்டோரியா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.