வேலூர், ஜன.18: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வினாடி வினா போட்டி நடைபெற உள்ளதாக வேலூர் கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில், 14வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாநில அளவில் பொதுமக்களுக்கான வினாடி வினா போட்டி வரும் 21ம்தேதி காலை 11 மணி முதல் 11.15 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க https://www.enrolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதள முகவரியில் தங்களின் பெயர், விபரங்களை பதிவு செய்யலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் விபரங்களை இன்றும், நாளையும் ஆகிய 2 நாட்களில் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதில் கலந்து கொள்ள பங்கேற்பாளரின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயமாக உள்ளீடு செய்ய வேண்டும் ‘இந்திய தேர்தல்கள்’ தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டி நடக்கிறது. இதுபற்றி மேலும் விபரங்கள் பெற https://www.enrolls.tn.gov.in/Quiz2024, மாநில தொடர்பு மையம் எண் 1800-4252-1950 மற்றும் மாவட்ட தொடர்பு மையம் எண் 1950 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய வாக்காளர் தின வினாடி, வினா போட்டி
previous post