கறம்பக்குடி,ஏப்.18: தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் 2022-23ம் கல்வி ஆண்டில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வை எழுதினர்.
இதில் அப்பள்ளியை சேர்ந்த 5 மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சிவனேகா என்ற மாணவி மாவட்ட அளவில் தேசிய திறனாய்வு தேர்வில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேர்ச்சி பெற்ற 5 மாணவ மாணவிகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுவினர் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர்.