செய்முறை: கனமான பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ஏலக்காய், துருவிய தேங்காய், பொடித்த வெல்லம் சேர்த்து பூரணமாய் வைத்துக்கொள்ளவும். கோதுமை மாவு, ரவை, 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு சிட்டிகை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். இந்த கோதுமை மாவை சப்பாத்திகளாய் இட்டு அதனை சிறு மூடி கொண்டு, சிறு, சிறு வட்டங்களாய் கட் செய்துகொள்ளவும். பின் அந்த வட்ட துண்டில் 1/2 டீஸ்பூன் பூரணம் வைத்து மூடி, தேங்காய் குடுமிபோல் சுருட்டிக்கொள்ளவும். பின்பு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான மோதகம் தயார்.