தர்மபுரி, பிப்.6: பென்னாகரம் அடுத்த காளநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி(53), கூலித்தொழிலாளி. இவருக்கு ராசாத்தி, செல்லம்மாள் என 2 மனைவிகள் உள்ளனர். உறவினர் ஒருவருடன் அம்மாசிக்கு நிலப்பிரச்னை இருந்துவந்தது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழைமை எட்டியாம்பட்டி பெரியமாரியம்மன் கோயில் பகுதியில் விஷம் குடித்த நிலையில் அம்மாசி மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அம்மாசி உயிரிழந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.