Wednesday, May 15, 2024
Home » தெற்கு டெல்லியில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

தெற்கு டெல்லியில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

by kannappan

புதுடெல்லி: தெற்கு டெல்லியின் ஜவுனாபூர் மற்றும் தேரா மண்டி  வனப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுக்கோரிய உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம்(என்ஜிடி) தள்ளுபடி  செய்து உத்தரவிட்டது. தெற்கு டெல்லியின் ஜவுனாபூர் மற்றும் தேரா மண்டி வனப்பகுதிகளில் ஆக்ரமித்து அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுமாறு கடந்த 2015 ஆம் ஆண்டு என்ஜிடி உத்தரவை பிறப்பித்து இருந்தது. ஆனால், என்ஜிடியின் இந்த உத்தரவு அரசால் பின்பற்றப்படவில்லை. இதையடுத்து, தெற்கு டெல்லியில் வசிக்கும் அமர்ஜித் சிங் நல்வா மற்றும் பலர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், வனப்பகுதியில் அனுமதியின்றி கட்டுமானப்பணிகள்  நடைபெறுவதாகவும், அவற்றை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்பதையும மனுவில் சுட்டிக்காட்டி இவற்றை அகற்றக்கோரிய என்ஜியின் முந்தைய உத்தரவு பின்பற்றப்படவில்லை எனவும், எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வக்கீல், உரிய எண்ணிக்கையில் போலீசார் இல்லாததால் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற உத்தரவிட்ட தேதியில் என்ஜிடியின் உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை என டெல்லி அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய என்ஜிடியின் முந்தைய உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு என்ஜிடி நீதிபதி ஏ கே கோயல் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவரது அந்த உத்தரவில், இந்த விவகாரத்தில் ஆக்ரமிப்பு இருக்கிறதா இல்லையா என்பது பற்றி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை முடிவு செய்யவில்லை. எனவே, இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை சீராய்வு செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழவில்லை. முந்தைய உத்தரவால் பாதிப்பு இருக்கிறது எனில், அவற்றை எதிர்த்து மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால், முந்தைய உத்தரவை சீராய்வு செய்யக்கோருவதை ஏற்க முடியாது. எனவே, அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்….

You may also like

Leave a Comment

fourteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi