தூத்துக்குடி, மே 22:தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விரால் மீன் வளர்ப்பு குறித்த ஒரு நாள் உள் வளாக மற்றும் இணையதள பயிற்சி நடந்தது. பயிற்சி முகாமிற்கு பேராசிரியர் ஆதித்தன் தலைமை வகித்து பயிற்சியை நடத்தினார். பயிற்சியில் விரால் மீன் வளர்ப்பின் முக்கியவத்துவம், இந்தியாவின் விரால் மீன் வளர்ப்பின் தற்போதைய நிலை, இடம் தேர்வு, விரால் மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு முன் செய்ய வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. மேலும் இம்முகாமில் மீன் தீவனம் அளித்தல், அறுவடை செய்த மீன்களை சந்தைப்படுத்துதல், உற்பத்தி செலவின கணக்கீடு ஆகிய தலைப்புகளில் தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன.