தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சார்பில் பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய 3 முக்கிய நகரங்களை கண்டறிந்து ஏதாவது ஒருநகரத்தில் அதற்கான தகுதியான நிலப்பரப்பு சுமார் 1000 ஏக்கர் தேர்வு செய்யப்படும். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்தியாவின் வர்த்தக இயந்திரமாக செயல்படும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம், 95 ஆயிரம் டிடபிள்யூடி கொள்ளளவு உடைய பெரிய வகை கப்பல்களையும், சுமார் 300 மீட்டர், நீளமுடைய சரக்குப் பெட்டக கப்பல்களையும் கையாளும் வகையில் 14.20 மீட்டர் மிதவை ஆழத்துடன் செயல்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் மிகவேகமாக வளர்ந்துவரும் வ.உ.சி துறைமுகமும் இந்திய பொருளாதாரத்திற்கு இணையாக வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக சாலை மார்க்கமாக அனுப்படும் சரக்குப் போக்குவரத்து குறிப்பிட தகுந்த வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறைமுகத்தில் சாலைமார்க்கமாக 76 சதவிகித சரக்குகளும், கன்வேயர் மார்க்கமாக 20 சதவிகிதமும், குழாய்கள் மற்றும் ரயில் மார்க்கமாக 2 சதவிகிதமும் கையாளப்படுகிறது. இத்துறைமுகத்தின் ஏற்றுமதி, இறக்குமதியின் சரக்குகளை கையாள வசதியாக தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் செல்லும் விதத்தில் தேசியநெடுஞ்சாலை 138 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 38 சாலைகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கு சரக்குகளை அதிவேகமாக அனுப்பும் வசதியை இத்துறைமுகம் பெற்றுள்ளது. இத்துறைமுகத்தில் முக்கிய உற்பத்தி கேந்திரமாக அமைவதற்கு கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, பொள்ளாச்சி. கரூர், ராஜபாளையம் மற்றும் மதுரை ஆகிய பகுதிகள் திகழ்கின்றன. இப்பகுதிகளின் மூலமாக மிக அதிக அளவில் நடைபெறும் வர்த்தக்கத்தை கருத்தில் கொண்டும் இத்துறைமுகத்தின் இயற்கையான கிழக்கு மற்றும் மேற்கு கரையோர பகுதிகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளதை கருத்தில் கொண்டும் பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா’ ஒன்று அமைப்பதற்கு இத்துறைமுகம் திட்டமிட்டுள்ளது.இந்த பல்வேறு சரக்குப் போக்குவரத்து பூங்காவில் சரக்குப் பெட்டகம் மற்றும் மொத்த சரக்குகளை சுலபமான விதத்தில் கையாளும் வகையில் சரக்குகளை பரிமாற்றம் செய்யவதற்குகாக அமைக்கப்படும். மேலும் இந்த பூங்காவில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு, சிறப்பு வசதிகளுடன் கூடிய சேமிப்பு கிடங்கு மற்றும் பல்வேறு இயந்திர வசதிகளும் கூடிய சேமிப்பு கிடங்களில் சரக்குகளை சுலபமாக ஒரு போக்குவரத்திலிருந்து மற்றொரு போக்குவரத்துக்கு மாற்றும் வகையில் ஏற்படுதப்படும். மேலும் சுங்கதுறை அனுமதி, சுங்கதுறை அனுமதிபெற்ற சேமிப்புகிடங்குகள், பரிசோதனை வசதிகள், உற்பத்திக்கு பின் நடைபெறும் வகைப்படுத்துதல். பேக்கிங் மற்றும் இதரவசதிகளை உள்ளடக்கிய ‘பல்நோக்குசரக்கு போக்குவரத்து பூங்கா’ அமைக்கப்படும். புதிதாக அமைக்கப்பட உள்ள இந்த பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்காவுக்காக கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய 3 முக்கிய நகரங்களை கண்டறிந்து ஏதாவது ஒருநகரத்தில் அதற்கான தகுதியான நிலப்பரப்பு சுமார் 1000 ஏக்கர் தேர்வு செய்யப்படும். இந்த பூங்கா அமைப்பதற்காக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொழிற்சாலை மற்றும் வர்த்தக அமைப்புகளுடனும் மற்றும் துறைமுக பயனாளிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதன் அடிப்படையில் தகுதியானசாலை, ரயில் போக்குவரத்து உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது….