தூத்துக்குடி, ஜூலை 13: தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் அளித்த 13 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 42 மனுதாரர்கள் என மொத்தம் 55 மனுதாரர்கள் தங்கள் மனுவை அளித்தனர். குறைகளை கேட்டறிந்த எஸ்பி பாலாஜி சரவணன், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் ஏடிஎஸ்பிகள் கார்த்திகேயன், உண்ணிகிருஷ்ணன், கோடிலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
previous post