தூத்துக்குடி, ஜூலை 15: தூத்துக்குடியில் பைக்கில் கஞ்சா கடத்திய 4பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி எஸ்பி தனிப்படை எஸ்ஐ ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி டவுன் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் 3 பைக்குகளில் வந்த 4 பேரை பிடித்து சோதனையிட்டனர். இதில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 7வது தெருவைச்சேர்ந்த யோகராஜ் (34), தூத்துக்குடி ஹவுசிங் போர்டு, கேடிசி நகரைச்சேர்ந்த ராம்குமார் (26), அதே ஊர், ரஹ்மத்துல்புரத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் (25), சுல்தான் அலாவுதீன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 4 செல்போன்கள், ரூ.2800 மற்றும் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரும் தூத்துக்குடி மதுவிலக்கு தடுப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதில் யோகராஜ் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் பைக்கில் கஞ்சா கடத்திய 4பேர் கைது
previous post