தூத்துக்குடி, நவ.21: தூத்துக்குடியில் பழ வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ₹7 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மணிநகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வைகுண்டராமன்(37). இவர் அப்பகுதியில் பழங்கள் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த நவம்பர் 11ம் தேதி தூத்துக்குடி மணிநகரில் உள்ள வீட்டைப்பூட்டிவிட்டு, தனது சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு சென்றார். பின்னர் நவம்பர் 17ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே வைத்திருந்த ₹7ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.இதுகுறித்து வைகுண்டராமன் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் எஸ்ஐ இசக்கியப்பன் வழக்கு பதிந்து, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.