சென்னை, ஆக.13: சுதந்திரத்தையொட்டி சென்னை துறைமுகம் முதல் பெசன்ட்நகர் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைக்க உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக 15ம் தேதி காலை 4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் – பெசன்ட் நகர் வரை உள்ள கடலோர பகுதிகளில் கரையிலிருந்து 5 கடல் மைல் தொலைவு வரை மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அந்தந்த ஊர் பஞ்சாயத்து மற்றும் சங்கத்தை சேர்ந்த மீனவர்களிடம் அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.