திருச்சி: திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை, தீ தடுப்பு மற்றும் பேரிடர் அவசரகால முதலுதவி குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அனுசியா உத்தரவின் பேரில், தீ தடுப்பு மற்றும் பேரிடர் அவசரகால முதலுதவி குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பருவ மழை காலங்களில் தடுப்பு நடவடிக்கை குறித்தும், தற்செயலாக அலுவலகங்களில் தீவிபத்து ஏற்படும் போது, எண்ணெயினால் ஏற்படும் தீயை எவ்வாறு அணைப்பது. சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் தீயை எவ்வாறு கையாள்வது, தீயை கட்டுப்படுத்தி அணைப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. தீ விபத்து ஏற்படும் போது எப்படி தற்காப்பது, மற்றவர்களை காப்பாற்றுவது குறித்த பல்வேறு செயல்முறை விளக்கங்களை அளித்தனர்.