சென்னை: தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (4ம் தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளி சமயத்தில் நகை வாங்குவதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில், ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று தொடங்கியது. அதில், தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.4,493க்கும், சவரனுக்கு ரூ.104 குறைந்து ஒரு சவரன் ரூ.35,944க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.232 குறைந்துள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.36,064க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,508க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 68.70 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 68.90 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 68900.00 என விற்பனையாகி வருகிறது தீபாவளி நெருங்கும் நிலையில், தங்கம் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்….