Sunday, May 19, 2024
Home » திருவொற்றியூர் தேரடி நிலையத்தில் இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிறுத்தம்; மகிழ்ச்சியில் பயணிகள்

திருவொற்றியூர் தேரடி நிலையத்தில் இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிறுத்தம்; மகிழ்ச்சியில் பயணிகள்

by kannappan

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையத்தில் இன்றுமுதல் ரயில்கள் நின்றுச் செல்வதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து சென்னை விமான நிலையம், வண்ணாரப்பேட்டை முதல் வழித்தடத்திலும் சென்னை சென்ட்ரல் பரங்கிமலை வரை 2ம் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிறுத்தம், விம்கோ நகர் பணிமனை ஆகியவற்றில் பணிகள் முழுமையாக நிறைவுபெறவில்லை.  இதன்காரணமாக திருவொற்றியூர் தேரடியில் மெட்ரோ ரயில் நிறுத்தப்படாமல் அதற்கு அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு வந்தது. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர். இந்தநிலையில், விம்கோநகர் பணிமனை, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிறுத்தத்தில் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்றுகாலை முதல் இந்த இரண்டு இடங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில்,திருவொற்றியூர் நிறுத்தத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் நகரும் படிக்கட்டுகள் இன்னும் அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மின் தூக்கிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் திருவொற்றியூர் தேரடியில் இன்று காலை முதல்  மெட்ரோ ரயில் நின்றுச் செல்வதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாசி உற்சவத்தின்போது திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் இருந்து  சுமார் 41 அடி உயரம் கொண்ட  திருத்தேர் தேரடி சந்திப்பில் மெட்ரோ ரயில் பாதையை கடந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக மீண்டும் எல்லையம்மன்  கோயில் தெரு அருகே மெட்ரோ ரயில் பாதைக்கு கீழ் நுழைந்து  தெற்கு மாடவீதி வழியாக கோயிலை சுற்றி கோயில் வாசலுக்கு வரும். இதனால் திருத்தேரில் உயரத்துக்கு ஏற்ப தேரடியில் இருந்து எல்லையம்மன் கோயில் வரை சுமார் 400 மீட்டர் தூரத்துக்கு வழக்கத்தை விட உயரமாக மெட்ரோ ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் தேரடி சந்திப்பில் நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கு போதிய இடவசதி கிடைக்கவில்லை. இதன்காரணமாகத்தான் தேரடி  நிறுத்தத்தில்  நகரும் படிக்கட்டுகள் அமைக்க முடியவில்லை என்று தெரிகிறது. …

You may also like

Leave a Comment

twenty − 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi