சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்பேரில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி திருவேங்கடமுடையான் கோயிலுக்கு சொந்தமான 1150 சதுர அடி பரப்பிலான கட்டிடம் திருக்கோயில் வசம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை, பைராகிமடம் பகுதியில் உள்ள திருவேங்கடமுடையான் கோயிலுக்கு சொந்தமான 1150 சதுர அடி கட்டிடம் என்.எஸ்.சி போஸ் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தினை லதா மகேஷ்வரி என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இவர் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்ததால், இவர் மீது நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 7-ன்படி வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பின்படி இன்று நேற்று வருவாய் மற்றும் காவல் துறை உதவியுடன் அக்கட்டிடம் திருக்கோயில் வசம் மீட்கப்பட்டது….