திருவாடானை, டிச.17: தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாடானை சுற்றுவட்டார பகுதிகளான திருவாடானை, சிகே மங்கலம், மங்களக்குடி, திருவெற்றியூர்,தொண்டி, எஸ்பிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் விவசாயிகளின் உரமிடல், களையெடுப்பு, மருந்தடித்தல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வேலைக்கு செல்ல வேண்டிய தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை. திருவாடானை, சி.கேமங்களம், மங்களக்குடி போன்ற நகரப் பகுதிகளில் கடை தெருவுக்கு செல்ல முடியவில்லை. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.